வெள்ளி, 6 டிசம்பர், 2013

"நீலம்"

நான் எப்பவுமே அதிகம் எழுத மாட்டேன். சந்தோசமா இருக்கும் போது மட்டும் எழுதுவேன். இப்போ  நான் சந்தோசமா இருக்கேன். அதுக்கு காரணம் நீலம் புயல்.


 

30 -10 -2012 செவ்வாய்க் கிழமை மாலை நான் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தேன். எனக்கு காலை 8 மணிக்கே மார்னிங் கிளாஸ் வெச்சிடுவாங்க . காலைல எப்பவும் சாப்பிடாம தான் ஸ்கூல்க்கு  போவேன். ஆனால் காலை, மதியம் சாப்பிட ரெண்டு டிபன் பாக்ஸ் சாப்பாடு எடுத்துட்டு போய்டுவேன். அதே மாதிரி அன்னைக்கு கொண்டு போனேன். இப்போ அது  பிரச்சனை இல்லை.

காலைல சாப்பிட்ட டிபன் பாக்ஸ்ஸ ஸ்கூல்லையே மறந்து  வைச்சிட்டு   வந்துட்டேன். அதனால  ரொம்ப  கவலை i பட்டேன். படிச்சா  கூட  மண்டைல ஒன்னும் ஏறல தெரியுமா. சும்மா ஏதோ புக்க  வெச்சிட்டு தான் இருந்தேன்.  படிக்கல. நான் எத வேணாலும்  மறந்துடுவேன் .  ஆனா, டிபன் பாக்ஸ்ஸ மட்டும் மறக்க மாட்டேன். அத எப்படி மறந்தேன் ன்னு தான் இன்னும் புரியல. எங்களுக்கு 5.30 க்கு தான் ஸ்கூல் விடுவாங்க. நான் 5 மணிக்கே டிபன் பாக்ஸ்ஸ பாக்ல வெச்சிடுவேன். அன்னைக்குன்னு பார்த்து வேற டிபன் பாக்ஸ் கொண்டு போய் இருந்தேன். இன்னொன்னு  எப்பவும் நான் கொண்டு போறது . அதனால்  அத மறக்காம   bag ல போட்டுட்டேன் . இன்னொண்ணுல நான் சாப்பிட்டாத ஞாபகம் இல்ல.

இத்தனைக்கும்  அந்த டிபன் பாக்ஸ் யாருதுன்னு என் பெஞ்ச் ல நானே  கேட்டேன்  . அவங்க  காதுல விழல . சரி யாரோ எடுதுக்குவாங்கன்னு நான் வெச்சிட்டு வந்துட்டேன். வீட்டுல டிபன் பாக்ஸ் கழட்டி வைக்கும் போது தான் ஞாபகமே வந்தது. நாம ரெண்டு டிபன் பாக்ஸ் கொண்டு போனோமே . ஒன்னு   இங்க  இருக்கு, இன்னொன்னு  எங்க ன்னு. bag லையே  இன்னொரு முறை தேடினேன். அப்பத்தான் நினச்சேன். நாம யாருதுன்னு கேட்டது நம்ம டிபன்  பாக்ஸ் ன்னு. அம்மாகிட்ட  சொன்னேன்.சரி விடு நாளைக்கு எடுத்துக்கலாம் ன்னு சொன்னாங்க.

என் மனசு கேக்கவே இல்ல. அத எப்படி மறந்தேன் ன்னு யோசிச்சு யோசிச்சு மணி 8 ஆச்சு . அப்போ நீலம் புய பற்றி பேசிட்டு இருந்தாங்க. நான் சரியா காதுல வாங்கிக்கல. நான் தான் சோகத்துல இருக்கேனே. டிபன் பாக்ஸ் விட்டுட்டு வந்துட்டேன்னு. அப்போ தான் டிவி ல நீலம் புயல் காரணமா சில மாவட்டத்துக்கு லீவ் ன்னு சொன்னாங்க. அத பார்த்ததுமே  நம்ம சேலம் வராதா  ன்னு எவ்வளவு  நேரம்  பார்த்தேன் தெரியுமா ?  கடைசி வரைக்கும் போடல. அத நினச்சி, அந்த நேரத்துல என் டிபன் பாக்ஸ் விசயத்தையே மறந்துட்டனா பார்த்துக்கோங்க . சரி எப்படியும்  போடவே மாட்டாங்க ன்னு தெரிஞ்சிகிட்டு நான் நொந்து போயிட்டேன். ஒன்னும் படிக்கல.

அடுத்த நாள் ஏழு மணிக்கு ஸ்கூல் க்கு கிளம்பிட்டேன். அப்போ பார்த்து செய்தில  சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை   ன்னு போட்டாங்க.  ப்ரெண்ட்ஸ் க்கு எல்லாம் போன் பண்ணி இன்னைக்கு லீவு இன்னைக்கு லீவு ன்னு சொல்லி கிட்டே இருந்தேன். அன்னைக்கு முழுக்க மகிழ்ச்சியா  இருந்தது. ஒண்ணுமே  படிக்காதது மட்டும் தான் கஷ்டமா இருந்தது. புதிய தலைமுறைசேனல்ல மகாலிங்கம் ஒருத்தர் கலங்கரை விளக்கத்துல ஏறி செய்தி சொல்லிகிட்டே இருந்தாரு. நடுல ''புயலை தொடரும் புதிய தலைமுறை'' ன்னு வேற போட்டுகிட்டே  இருந்தாங்க. இது  மட்டும் இல்லாம ,  கீழ   ஓடுற செய்தில . " வானம் மோகமூட்டத்துடன் காணப்படுகிறது " ன்னு போட்டாங்க. ஹலோ ஒரு நிமிஷம் நான் தப்பா எழுதல. செய்திலையே தப்பா தான் போட்டாங்க. அத பார்த்து நானும் அக்காவும் சிரிச்சோம். அந்த சந்தோசம்  அதிக  நேரம்  நீடிக்கல . மாலை ஐந்து  மணி இருக்கும். நாளை வியாழக்கிழமை   சில மாவட்டங்களுக்கு விடுமுறை ன்னு போட  ஆரம்பிச்சிட்டாங்க. இருக்க இருக்க மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகமாச்சு. ஆனால், சேலம் போடவே இல்ல. எனக்கு கோபம் இவ்வளவு தான்னு இல்ல. ஏனா  ஈரோடு, வேலூர், எல்லாம் இருக்கே சேலம் இல்லையே ன்னு தான். திருவண்ணாமலை , கன்னியாகுமரி னு அதிக  எழுத்து இருக்குற  ஊருக்கெல்லாம்  விட்டுட்டாங்க .  நம்ம மூணு  எழுத்து இருக்கிற  சேலத்துக்கு மட்டும் விடலன்னு வருத்தமாச்சு. சரி இருந்தாலும் முயற்சிய கைவிடாம  பத்து  , பதினோரு  மணி வரை   டிவி பார்த்துட்டே  இருந்தேன். அம்மாவேற வா தூங்கலாம். காலைல ஸ்கூல் க்கு போகனும் ன்னு வேற கடுப்பேத்தினாங்க. ஒரு வேளை ஸ்கூல் இருந்தாலும் இருக்கும் னு நினச்சேன். எங்க ஸ்கூல் சுதந்திர  தின  விழா  அன்னைக்கு கூட full day வெச்சாங்க . அப்போ எங்களுக்கு  எப்படி இருக்கும். சரி அதையே  சமாளிச்சிட்டோம் , இதெல்லாம்  என்ன  ன்னு மனச தேத்திகிட்டேன்.

நான் அக்காகிட்ட  நீ லீவ் விடுறாங்களா ன்னு பார்த்துட்டே இருன்னு லீவ் ன்னு போட்டா  என்னை எழுப்பியாவது சொல்லு ன்னு துங்கப்போனேன். சொல்லும் போதே துக்கம் தொண்டைய அடைச்சது.. நான் தூங்குறதுக்கு  முன்னாடி  ஜன்னலருக்கே  நின்னு  பார்த்தேன் காத்து  நல்லா வீசினது, வெளில  கதவ திறந்து  பார்த்தேன் மழை வர அறிகுறியே இல்ல. நான் சோகமா கதவ சாத்திவிட்டுட்டு மீண்டும் ஜன்னல் அருகே போய் நின்னேன். எங்க ஜன்னலுக்கு பக்கத்துல அரசமரம் இருக்கு. அதுல இருந்து காத்து  வீசியது . அப்போ அக்கா சொன்னா  இது  தான் நீலம் புயல் ன்னு. நான்  நீலம் புயல்கிட்ட சோகமா நாலு வார்த்தை பேசிட்டு படுக்க போயிட்டேன். அப்போ எங்கயோ இருந்து''நான் வருவேன்''  ன்னு ரகுமான் பாடிய பாட்டுபாடிகிட்டு  இருந்தது. அது நீலம் புயல் சொல்ற  மாதிரியே  இருந்தது. நல்லா தூங்கிட்டேன்.

அடுத்த நாள் - இன்று காலை ஆறரை மணிக்கு எழுந்தேன். டிவி பார்த்தா சேலத்துக்கு விடுமுறை ன்னு ஓடிகிட்டு   இருந்தது. நான் மனசார எங்க ஊர் மாவட்ட ஆட்சியர் க்கு    நன்றி சொன்னேன். அக்காவ  எழுப்பி   சேலத்துக்கு லீவ் ன்னு சொல்லிட்டு திரும்பவும் படுத்துட்டேன். அக்கா, காலேஜிக்குமா ன்னு கேட்டா, நீயே பார்த்துக்கோ ன்னு சொல்லிட்டு படுத்துட்டேன். அப்புறம் ஒன்பது மணிக்கு தான் எழுந்தேன். இன்னைக்கு உருப்படியா  ஒன்னும் செய்யல . இத  எழுதியதை  தவிர.  வீட்டுல புயல பற்றி பேசிட்டு இருந்தாங்க. வாரம் வாரம் நீலம் வந்தா நல்லா இருக்கும் ன்னு சொன்னேன். எல்லோரும் சிரிச்சாங்க.

என் டிபன் பாக்ஸ் மறந்து வெச்சிட்டு வந்த சோகத்துல நான் இருந்த போது நீலம் புயல் தான் அந்த சோகத்தை   மறக்க வைக்க  லீவ் விட்டது . இப்போ என் டிபன் பாக்ஸ் விட்டுட்டு வந்த சோகத்தை   விட  நீலம்புயல்  போய்டுச்சே ன்னு சோகம் தான் இப்போ அதிகமா இருக்கு .

டிபன் பாக்ஸ் கூட நாளைக்கு போய் கிளாஸ்ல எடுத்துக்கலாம். ஆனால் நீலம் புயல...... :( :( :(