வியாழன், 9 ஆகஸ்ட், 2012

"மூன்று பாரதியார்கள்

எங்களுக்கு நேற்று காலாண்டு தேர்வு முடிந்தது. எங்கள் தமிழ் தேர்வு அன்று நடந்த ஒரு நிகழ்வை பதிவு செய்கிறேன். தமிழ் தேர்வு அன்று தேர்வு எழுதிவிட்டு வந்தோம். பின்னர் நானும் எனது தோழிகளும் வகுப்பறைக்கு வந்து நாம எழுதியது சரியா தவறா என்று நோட்ஸ் எடுத்து திருப்பி திருப்பி பார்த்துகிட்டு இருந்தோம். அப்போ சில பேர் ஹைய்யா நான் எழுதியது சரி என்றும் மற்றும் சில பேர் ஐயோ நான் இது தப்பு பண்ணிட்டேன்டி அப்படினும் பீல் பண்ணி சொல்லிட்டு இருந்தாங்க.

இந்து ப்ரியா ன்னு ஒரு பொண்ணும், கோகிலான்னு ஒரு பொண்ணும் எத்தனை ரைட் எத்தன தப்புன்னு சொல்லிட்டு இருந்தாங்க. அப்போ கோகிலான்னு சொன்னேனே அந்த பொண்ணு என்கிட்ட பாரதியார் குறிப்பு வரைக என்று கேள்வி தாளில் வந்து இருந்ததே அதுக்கு நோட்ஸ்ல இருந்த சுப்பிரமணிய பாரதியார் குறிப்பு வரைக அதுதானே எழுதணும் ன்னு கேட்டா... ஆமாம்டி அது தான் எழுதணும் ன்னு நானும் சொன்னேன்.

அப்போ இந்து ப்ரியாக்கு தோணுச்சு பாருங்க ஒரு சந்தேகம் என்கிட்ட ஏண்டி சுப்பிரமணிய பாரதியாரும், வெறும் பாரதியாரும் ஒண்ணானு கேட்டா....?? எனக்கு இந்த கேள்வியை கேட்டு அவ நிலைய நினச்சி மனசுக்குள்ள சிரிச்சேன்.. அப்புறம் நான் வேணுன்னே சொன்னேன், இல்லடி பாரதியாரும், சுப்பிரமணிய பாரதியாரும் பக்கத்து பக்கத்து வீட்டுல இருந்தவங்கன்னு சொன்னேன். அதுக்கு அவள், அதானே பார்த்தேன் எப்படியோடி நல்லவேள நான் அந்த கேள்வியை எழுதல கோகிலாக்கு ஐந்து மார்க்கு போச்சுப்போ ன்னு சொன்னாள். நீயும் அந்த பாரதியார் கேள்விக்கு நோட்ஸ்ல இருந்த சுப்பிரமணிய பாரதியார் பதிலையா எழுதிவெச்ச ன்னு கேட்டா. நானும் சோகமா முகத்தை வெச்சிகிட்டு ஆமாம்டி நானும் தெரியாம அத தான் எழுதிவெச்சிட்டேன் ன்னு சொன்னேன்.

அதுக்கு அவள், ஏண்டி question ன ரெண்டு மூணு தடவ திருப்பி படிக்கமாட்டீங்களா ன்னு எங்கள திட்டினா. அப்புற அவ கேட்டா எக்ஸாம் ஹால் க்கு நாம போகும் போது +2 அக்காங்க மகாக்கவி சுப்பிரமணிய பாரதியார் எட்டயபுரத்துல பிறந்தாங்கன்னு படிச்சிட்டு இருந்தாங்களே அவர் யாருடி ன்னு என்கிட்ட கேட்டா... நான் சொன்னேன் அய்யய்யோ இவர பத்தி சொல்றதுக்கு மறந்துட்டேண்டி.. சீக்கிரம் சொல்லுடி சாப்பிட போகணும் ன்னு அவசரபட்டாள் இந்து ப்ரியா. இம் சரி அப்படின்னு நான் கதை உட ஆரம்பிச்சேன்.....

பாரதியார், சுப்பிரமணிய பாரதியார், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எல்லோருமே சின்ன வயசுல இருந்து பக்கத்துக்கு பக்கத்து வீட்டுல இருந்தவங்க.. ஒண்ணா விளையாடுவாங்க ன்னு சொன்னேன். அப்படியாடி ன்னு ஆச்சரியமா கேட்டா. ஆமாம்டி ன்னு சொன்னேன்.

அப்புறம் ஏன் பாரதியார் பற்றி மட்டும் குறிப்பு வரைக ன்னு கேட்குறாங்க... சுப்பிரமணிய பாரதியும், மகாகவி சுப்பிரமணிய பாரதியும் பாவம் தானே.... அவங்க குறிப்பு ஏன் தரவே மாட்டிக்குறாங்க ன்னு கேட்டா.... அதுக்கு நான் சொன்னேன், இல்லடி பாரதியாருக்கு மட்டும் தான் நல்லா கவிதை எழுத தெரியும். மீதி ரெண்டு பேரும் சுமாராதான் எழுதுவாங்க ன்னு சொன்னேன். அப்போ மத்த ரெண்டு பேரோட கவிதைகள் இருக்கா.... ?/ ன்னு கேட்டா... இருக்குடி ன்னு சொன்னேன். உங்க வீட்டுல இருக்கா ன்னு கேட்டா, இருக்கே ன்னு சொன்னேன்.

மூணு பேரோடு கவிதைகளுமே உங்க வீட்டுல இருக்கான்னு ஆச்சரியத்தோடு கேட்டா.. ஆமாம்டி ன்னு சொன்னேன். அவங்க ரெண்டு போரோட கவிதை புத்தகத்தையும் எடுத்துட்டு வாடி ன்னு சொன்னா. கொடுத்தா நீ படிப்பியான்னு கேட்டேன். இம் அவங்க குறிப்பையும், கவிதையையும் பார்க்கலாமே ன்னு தான் கேட்டேன். ன்னு சொன்னா. சரி நான் நாளைக்கு கொண்டுட்டு வரேன் சாயங்காலம் ஞாபகபடுதுன்னு சொன்னேன்...

அப்புறம் சாப்பிட உட்கார்ந்தோம். தமிழ் செகண்ட் பேப்பர்க்கு படிச்சிட்டு இருந்தோம். சாயங்காலம் வீட்டு பெல் அடிச்சாங்க. அப்போ ப்ரியா மறந்துடாதடி மூணு பாரதியார் புத்தகத்தையும் எடுத்துட்டு வான்னு சொன்னா.. அப்போ நான் அவகிட்ட மூன்று பாரதியாரெல்லாம் இல்லடி .. பாரதியார், சுப்பிரமணிய பாரதியார், மாககவி சுப்பிரமணிய பாரதியார் எல்லோரும் ஒருதங்கதான் ன்னு சொன்னேன்.

அதுக்கு அவள், ஏய்...... போய் சொல்லாதடி நாளைக்கு உன்னால அவங்க மூணு பேரோட புத்தகத்தை எடுத்துட்டு வர முடியாதுன்னா முடியாதுன்னு சொளிடி, அதுக்காக இப்படி அவங்க மூணு பேரும் ஒருத்தங்கதான் ன்னு சொல்லாத எனக்கு கெட்ட கோவம் வந்துடும் ன்னு மிரட்டினா......

நான் அவளிடம் உண்மையாக ஒருத்தர் தான். அவர் இயற்பெயர் சுப்பிரமணியம். அவர் சின்ன வயசுலேயே கவிதை எழுதினதால பாரதின்னு பட்டம் கொடுத்தாங்க. அவர் சூப்பரா எழுதியதால மகாகவி ன்னு பட்டம் கொடுத்தாங்க என்று சொன்னேன்.

"கற்றது தமிழ்" அஞ்சலி மாதிரி ... " நிஜமாதான் சொல்றியா.." ன்னு கேட்டா.. நானும் ஜீவா மாதிரி இம்ம்ம்ம்ம்ம்ம்ம் ... ன்னு தலை ஆட்டினேன். உடனேஅவ நான் எதுக்கு கேக்குறேனா , மதியம் சொன்னத இப்போ பொய் ன்னு சொன்ன மாதிரி, இப்போ சொன்னத நாளைக்கு பொய்ன்னு சொல்லகூடாதுபாரு அதுக்கு தான்... இதுல என்ன பொய் சொல்றதுக்கு இருக்கு. காலைல நான் சொன்னது தான் பொய் இப்போ சொன்னது தான் நிஜம் னு சொன்னேன்.

சரி, இனி எந்த பாரதியார் குறிப்பு குறிப்பு வரைக ன்னு கேட்டாலும் இவரையே தான் எழுதணுமா ன்னு கேட்டா. ஆமாம் டி ன்னு சொல்லிட்டு நகர்ந்தேன்.

உடனே.... அப்போ பாரதியாரும், பாரதிராஜாவும் ..............ன்னு இழுத்தா.. உடனே நான் சிரிச்சிக்கிட்ட நாளைக்கு சொல்றேண்டின்னு ஓடி வந்துட்டேன்....

""" PRAISE THE LORD """

நான் பதினொன்றாம் வகுப்பு புதிய பள்ளியில் சேர்ந்த முதல் நாள் எனது வகுப்புக்குள் நுழைந்தேன். பெல் அடித்தது. prayer க்கு போனோம். எனக்கு அது புதியது அப்பள்ளியில். தமிழ் தாய் வாழ்த்து, உறுதி மொழி, செய்திகள் சொல்லி முடித்தாங்க... எங்க HM மைக்க பிடிச்சாங்க பாரு... சும்மா பத்து நிமிஷமா பேசினாங்க. பேசுறதுக்கு முன்னாடி, PRAISE THE LORD GUD MORNING CHILDREN ன்னு சொன்னாங்க.உடனே அணைத்து மாணவிகளும் GUD MORNING SISTER PRAISE THE LORD ன்னு சொன்னாங்க. அப்புறம் சிஸ்டர் பேச ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவிகளின் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை சொல்லி (முன் கூட்டியே சிஸ்டர் கிட்ட மாணவிகள் கடிதம் மூலம் சொல்லிடுவாங்க) குழந்தைகள் வேண்டினா இயேசு அப்பா மறுக்காம தருவாரு. இயேசு அப்பா இருப்பதே உங்களுக்காக தான். இயேசு அப்பா உங்க எல்லோரையும் கவனிச்சிகிட்டே தான் இருக்காரு. அதனால, நீங்க நல்லள பிள்ளைகளா இருக்கணும்ன்னு சொன்னாங்க. திரும்பவும் சிஸ்டர் PRAISE THE LORD CHILDREN நு சொல்வாங்க. உடனே மாணவிகளும் THANK U SISTER PRAISE THE LORD ன்னு சொன்னாங்க.

PRAYER முடிஞ்சி கிளாஸ் க்கு போனோம். PRAYER சொல்லிட்டு மீண்டும் PRAISE THE LORD மூன்று முறை சொல்லிட்டு அமர்ந்தோம். ஆசிரியை வந்தவுடன் மீண்டும் GUD MORNING MISS PRAISE THE LORD ன்னு சொன்னோம். உடனே மிஸ் GUD MORNING PRAISE THE LORD ன்னு சொன்னாங்க. மற்ற வகுப்பில் இருந்து எதாவது கேட்பதற்காக மாணவி யாரேனும் வந்தால் வகுப்பில் நுழைந்தவுடன் ஆசிரியையை பார்த்து GUD MORNING MISS PRAISE THE LORD ன்னு சொல்லி தனது தேவையை கேட்பாங்க. இப்படி ஒவ்வொரு மிஸஸ் வரும் போதும் இதே PRAISE THE LORD கூத்து தான் நடக்கும். படிக்கலனா கூட திட்டமாட்டாங்க போல இருக்கு, ஆனால், இந்த PRAISE THE LORD சொல்லலைனா திட்டுவாங்க போல் இருக்கு.

மதியம் சாப்பாட்டு மணி அடித்தவுடன் பைபிள் ல இருந்து வசனங்கள் சொல்லி மீண்டும் PRAISE THE LORD ன்னு சொல்லிட்டு சாப்பிடனும். சாப்பாடு பெல் முடிந்ததும் திரும்பவும் வகுப்புக்குள் வந்ததும் PRAYER சொல்லிட்டு PRAISE THE LORD சொல்லிட்டு உட்காரனும். சாயங்காலம் கிளம்பும் போதும் இதே PRAYER , PRAISE THE LORD சொல்லிட்டு தான் வீட்டுக்கு வரணும்......... இத்தனையும் ஒரு நாளில் நடந்தது. இது முதல் நாளில் மட்டும் அல்ல, நாள் தோறும் இதே கதை தான் தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது..........


புதன், 8 ஆகஸ்ட், 2012

எமது வித்தியாசமான ஆசிரியர்கள்...

எங்க கிளாஸ் மிஸ் ரொம்ப நல்லவங்க. படின்னு சொன்னதே இல்ல. நடத்தினால் தானே படிக்க சொல்லுவாங்க. மிஸ் வகுப்புக்கு வருவாங்க நாலஞ்சி பேஜ் திருப்புவாங்க. சும்மா நாலு லைன் நடத்துவாங்க பாடம் ஓவர் ன்னு சொல்லுவாங்க. இத்தனை நாளும் இதே தான் நடந்துட்டு இருக்கு. இதுல வேறு இந்த மிஸ் ரெண்டு சப்ஜெட் க்கு வராங்க (வணிகவியல், கணக்கு பதிவியல்)

அப்பிரம் எங்க தமிழ் மிஸ் பற்றி சொல்லியே ஆகணும். கோபபடுவது எப்படின்னு யாராவது தெரிஞ்சிக்கணும் ன்னு ஆசைபட்டா அவங்கள பார்த்து கத்துகலாம். கோபத்துல P .HD பண்ணவங்க பாடத்துக்கு நடுவுல நடுவுல வாங்க வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை INTREST டா சொல்லிட்டே போவாங்க.

அப்புறம் எங்க ENGLISH MAM எதாவது டெஸ்ட் ன்னு சொன்னாங்கன்னா MAM SORRY MAM படிக்கல MAM நாளைக்கு டெஸ்ட் வெச்சிக்கலாம் MAM இப்படி வார்த்தைக்கு வார்த்தை MAM MAM MAM ன்னு சொன்னா சரி நாளைக்கு டெஸ்ட் வெச்சிக்கலாம் ன்னு சொல்வாங்க. ஆனால், சில சமயம் இந்த MAM என்னும் மந்திரகோல் பலிக்காது. உசுர பணைய வெச்சி எத்தன முறை MAM MAM MAM ன்னு சொன்னாலும் டெஸ்ட் வெச்சிடுவாங்க. ஏன்னா...... யாரவது ஒரு மாணவி தெரியாம MISS ன்னு கூப்பிட்டு இருப்பா..... அது காரணமா கூட இருக்கலாம். இந்த கொடுமை எல்லாம் நடக்க கூடாதுன்னு தான் இங்கிலீஷ் PERIOD க்கு முந்தைய PERIODலையே MAM MAM MAM ன்னு சொல்லி PRACTISE பண்ணிக்குவோம். LEADER மாணவிகளுக்கு முன்னாடி நின்னு MAM வந்தாங்கன்னா GUD MORNING MAM ன்னு சத்தமா சொல்லுங்க. MAM MAM MAM ன்னு சொல்லுங்க.. அப்படி சொல்ல வராதவங்க சொல்லலைனாலும் பரவாயில்லை விட்டுடுங்க. அதுக்காக MISS ன்னு சொல்லிடாதிங்கன்னு மாணவிகளின் காலில் விழாத குறையாக பரிதாபமாக கெஞ்சுவாள்.

இந்த MAM என்ற வார்த்தைக்கே இங்கிலீஸ் MISS மயங்குவாங்கன்னு எங்களுக்கு கற்று கொடுத்ததே +2 அக்காங்க தான். நீங்க MISS ன்னு சொன்னா டெஸ்ட் கன்பார்ம் அதனால MAM ன்னு சொல்ல கத்துக்கோங்க ன்னு PRATISE தந்து வழிகாட்டினாங்க. ஆனால், B2 SECTION மாணவிகளுக்கு இந்த விவரம் தெரியாம MISS ன்னு சொல்லி சொல்லி தினமும் டெஸ்ட் எழுதுவாங்க பாவம்.........இன்டர்வெல் டைம்ல கூட டெஸ்ட் எழுதுவாங்க. அவங்க எழுதின டெஸ்ட் க்கு அளவே இல்லை. ஆனால், நாங்க எழுதிய டெஸ்ட்டை விரல் விட்டு எண்ணிடலாம். எங்களுக்கு தான் MAM தெரியுமே.......

அப்புறம் பொருளாதாரம் MISS அவங்க வாயில போடி, வாடி தான் வரும் ஆனால், இந்த பொருளாதார மிஸ்சை மடக்குவதற்கு MAAM ன்னு எதாவது வழி இருக்கான்னு நாங்க ஆராய்ச்சி எல்லாம் மேற்கொண்டோம்...... ஆனால், ஒரு வழியும் கிடைக்கல. டெஸ்ட் எழுதி தான் தொலையனும். MISS நல்லாத்தான் பாடம் நடத்துவாங்க. இப்படி பட மிஸ்க்கு ஒரு நாள் உடம்பு சரி இல்லாம போச்சு.. அதனால அவங்களுக்கு பதிலா வேற ஒரு மிஸ் பொருளாதாரம் பாடம் எடுத்தாங்க. (பழைய பொருளாதார மிஸ்சோடா மாணவி தான் புதிய பொருளாதார மிஸ் ) பழைய மிஸ் பாடம் நடத்தினா பாடத்தினை மட்டும் தான் நடத்துவாங்க. அனால், புதிய மிஸ் பாடத்தினை தவிர மற்றதை எல்லாம் சொல்லுவாங்க. அவங்க சொந்த கதை, சோககதை, அவங்க அம்மா அப்பா புருஷன் மாமனார் குழந்தை..... இப்படி இவங்கள பற்றியே தான் சொல்லிட்டே இருப்பாங்க.

இப்போ நினச்சாலும் சிரிப்பு சிரிப்பா வருது. அவ்வளவு நல்லா நடத்துவாங்க. பாடத்தினை அல்ல........ மிஸ் வகுப்புக்குள்ள ENTER ஆகும் போதும் நாங்க எல்லோரும் புத்தகத்தினை பையில் போட்டுவிடுவோம். முகத்தை கழுவிட்டு எல்லோரும் ஆர்வமா உட்கார்ந்துவிடுவோம். பாடத்தினை கவனிக்க அல்ல...... கதையினை கேட்க....

சில சமயம் நிஜமா பாடம் நடத்தும் பொது நான் சொல்றத மட்டும் கவனிச்சா போதும் புத்தகத்தினை பார்ககாதிங்க ன்னு சொல்வாங்க. மிஸ் அந்த அளவுக்கு டாப்பா நடதுவாங்கன்னு பார்த்தா புத்தகத்தை வரி விடாம படித்து முடித்து விடுவாங்க. அந்த விஷயம் எங்களுக்கு தெரிய கூடாதுன்னு தான் புத்தகத்தை மூட சொல்றாங்கன்னு எங்களுக்கு தெரிஞ்சி போச்சு. நடுவுல நடுவுல குடும்ப விவகாரம் வேற... நல்ல வேலை அப்புறம் எங்களுக்கு பழைய மிஸ் மீண்டும் வந்துட்டாங்க. அப்பாடா..... ன்னு பெருமூச்சு விட்டோம்.

அப்புறம் HISTORY MISS இவங்கள பற்றி சொல்ல ஒண்ணுமே இல்ல. எல்லாத்துலயும் BEST அவங்களுக்கு உடம்பு சரி இல்லாம போச்சு. புதிய பொருளாதாரத்துக்கு வந்த மிஸ் வரலாற்றுக்கும் வந்தாங்க..... என்ன நடந்து இருக்கும் ன்னு சொல்லவா வேணும்... அதே சொந்த கதைகள்...........அந்த மிஸ்க்கு எந்த பாடத்தினை கொடுத்தாலும் சொந்த கதையினை வெச்சே ஒட்டிடுவாங்க. எந்த பாடத்தினை கொடுத்தாலும் அவங்க எடுப்பது சொந்த பாடத்தினை தானே..... பாவம்.. இப்போ காலாண்டு விடுமுறை.... அந்த மிஸ் சொந்த கதையினை சொல்வதற்கு யாருமே இல்லாம தவிப்பாங்க.......அதை நினச்சா தான் வருத்தமா இருக்கு........


இதுவும் கடந்து போகும்

நாளைக்கு ஜூன் 1

தூக்கமே வர மாட்டிக்குது.... இதயம் படபடக்குது

பள்ளிக்கூடம் கண்ணுக்குள்ள வந்து வந்து போகுது....

ஸ்கூல யாராவது இடிக்க மாட்டாங்களான்னு தோணுது....

விடியவே கூடாதுன்னு தோணுது

பூமி சுத்துறது அப்படியே நின்னுடகூடாதா ன்னு தோணுது....

சின்ன புள்ளதனமா யோசிக்க தோணுது....

உங்களுக்கு எங்க தெரியும் ஸ்கூல் படிக்க போற கஷ்டம்லாம்..... நீங்க எல்லாத்தையும் கடந்து வந்துட்டீங்க....

கத்தி அழனும் போல இருக்கு யாராவது காப்பாத்துங்கன்னு.. ஆனால்... என்ன சொல்லி என்ன.... ஒண்ணுமே நடக்காதுன்னு நல்லாவே தெரியும்.. ஹும்ம்ம்ம் நான் மட்டுமா புலம்புறேன்,,,,, நாளைக்கு ஸ்கூல்க்கு போறத நினச்சி எல்லா பிள்ளைகளும் தான் புலம்புவாங்க....

எனக்கு ஸ்கூல் பிடிக்கவே பிடிக்காதுன்னு சொல்லல.. பிடிக்கும்.... ஆனால் பிடிக்காது...

ஒன்னு லீவ் விடனும்... அப்படியே விட்டாலும் வீட்டுபாடம் தரக்கூடாது. அதுக்கு பேசாம ஸ்கூலே வெச்சிடலாம் .... சரி படிச்சிட்டு வர சொன்னதை நாளைக்கு படிக்கலாம் , நாளைக்கு படிக்கலாம் ன்னு தள்ளி போட்டு தள்ளி போட்டு கடைசி நாளும் வந்துடுச்சி...எல்லா பாடத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் தொட்டு வெச்சி இருக்கேன். ஸ்கூல் க்கு போனா அங்கேயே இருக்கணும் ன்னு தோணும்....ஆனால் லீவ் விட்டா மட்டும் வீட்டுலயே இருக்கணும் ன்னு தோணுது....

படிக்குறதெல்லாம் படிச்சிடுவேன்.. ஆனால் வீட்டுபாடம் எழுதுறது தான் கஷ்டமா இருக்கு. எதுமே பண்ணாம போனா மிஸ் ஒரு மாசம் என்ன பண்ணி கிழிச்சீங்க ன்னு கேப்பாங்க.. ஆனால் அதே மிஸ் தான் லீவ்வ நல்ல என்ஜாய் பண்ணிக்கோங்க ன்னும் சொன்னாங்க.... இப்படி மிஸ் அந்நியன் மாதிரி பேசினா எப்படி....??!! துங்கினாவே மிஸ் உம், ஸ்கூல் உம் தான் கனவுல வருது. இப்ப நான் என்ன செய்ய.... இப்ப நான் என்ன செய்ய ..... (தம்பி படத்துல வர மாதவனை போல் படிக்கவும் )

அப்புறம் ஒரு மிக்கியமான விஷயம் இனி மேல் என்னை இந்த முக நூலில் அடிக்கடி பார்க்க முடியாது...... +2 முடிச்சிட்டு தான் மீண்டும் வருவேன்.... டாடா.......

இதுவும் கடந்து போகும் ன்னு ஒரு ஆசைல தான் நாளைக்கு பள்ளிக்கு போறேன்....