புதன், 8 ஆகஸ்ட், 2012

இதுவும் கடந்து போகும்

நாளைக்கு ஜூன் 1

தூக்கமே வர மாட்டிக்குது.... இதயம் படபடக்குது

பள்ளிக்கூடம் கண்ணுக்குள்ள வந்து வந்து போகுது....

ஸ்கூல யாராவது இடிக்க மாட்டாங்களான்னு தோணுது....

விடியவே கூடாதுன்னு தோணுது

பூமி சுத்துறது அப்படியே நின்னுடகூடாதா ன்னு தோணுது....

சின்ன புள்ளதனமா யோசிக்க தோணுது....

உங்களுக்கு எங்க தெரியும் ஸ்கூல் படிக்க போற கஷ்டம்லாம்..... நீங்க எல்லாத்தையும் கடந்து வந்துட்டீங்க....

கத்தி அழனும் போல இருக்கு யாராவது காப்பாத்துங்கன்னு.. ஆனால்... என்ன சொல்லி என்ன.... ஒண்ணுமே நடக்காதுன்னு நல்லாவே தெரியும்.. ஹும்ம்ம்ம் நான் மட்டுமா புலம்புறேன்,,,,, நாளைக்கு ஸ்கூல்க்கு போறத நினச்சி எல்லா பிள்ளைகளும் தான் புலம்புவாங்க....

எனக்கு ஸ்கூல் பிடிக்கவே பிடிக்காதுன்னு சொல்லல.. பிடிக்கும்.... ஆனால் பிடிக்காது...

ஒன்னு லீவ் விடனும்... அப்படியே விட்டாலும் வீட்டுபாடம் தரக்கூடாது. அதுக்கு பேசாம ஸ்கூலே வெச்சிடலாம் .... சரி படிச்சிட்டு வர சொன்னதை நாளைக்கு படிக்கலாம் , நாளைக்கு படிக்கலாம் ன்னு தள்ளி போட்டு தள்ளி போட்டு கடைசி நாளும் வந்துடுச்சி...எல்லா பாடத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் தொட்டு வெச்சி இருக்கேன். ஸ்கூல் க்கு போனா அங்கேயே இருக்கணும் ன்னு தோணும்....ஆனால் லீவ் விட்டா மட்டும் வீட்டுலயே இருக்கணும் ன்னு தோணுது....

படிக்குறதெல்லாம் படிச்சிடுவேன்.. ஆனால் வீட்டுபாடம் எழுதுறது தான் கஷ்டமா இருக்கு. எதுமே பண்ணாம போனா மிஸ் ஒரு மாசம் என்ன பண்ணி கிழிச்சீங்க ன்னு கேப்பாங்க.. ஆனால் அதே மிஸ் தான் லீவ்வ நல்ல என்ஜாய் பண்ணிக்கோங்க ன்னும் சொன்னாங்க.... இப்படி மிஸ் அந்நியன் மாதிரி பேசினா எப்படி....??!! துங்கினாவே மிஸ் உம், ஸ்கூல் உம் தான் கனவுல வருது. இப்ப நான் என்ன செய்ய.... இப்ப நான் என்ன செய்ய ..... (தம்பி படத்துல வர மாதவனை போல் படிக்கவும் )

அப்புறம் ஒரு மிக்கியமான விஷயம் இனி மேல் என்னை இந்த முக நூலில் அடிக்கடி பார்க்க முடியாது...... +2 முடிச்சிட்டு தான் மீண்டும் வருவேன்.... டாடா.......

இதுவும் கடந்து போகும் ன்னு ஒரு ஆசைல தான் நாளைக்கு பள்ளிக்கு போறேன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக