வியாழன், 9 ஆகஸ்ட், 2012

""" PRAISE THE LORD """

நான் பதினொன்றாம் வகுப்பு புதிய பள்ளியில் சேர்ந்த முதல் நாள் எனது வகுப்புக்குள் நுழைந்தேன். பெல் அடித்தது. prayer க்கு போனோம். எனக்கு அது புதியது அப்பள்ளியில். தமிழ் தாய் வாழ்த்து, உறுதி மொழி, செய்திகள் சொல்லி முடித்தாங்க... எங்க HM மைக்க பிடிச்சாங்க பாரு... சும்மா பத்து நிமிஷமா பேசினாங்க. பேசுறதுக்கு முன்னாடி, PRAISE THE LORD GUD MORNING CHILDREN ன்னு சொன்னாங்க.உடனே அணைத்து மாணவிகளும் GUD MORNING SISTER PRAISE THE LORD ன்னு சொன்னாங்க. அப்புறம் சிஸ்டர் பேச ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவிகளின் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை சொல்லி (முன் கூட்டியே சிஸ்டர் கிட்ட மாணவிகள் கடிதம் மூலம் சொல்லிடுவாங்க) குழந்தைகள் வேண்டினா இயேசு அப்பா மறுக்காம தருவாரு. இயேசு அப்பா இருப்பதே உங்களுக்காக தான். இயேசு அப்பா உங்க எல்லோரையும் கவனிச்சிகிட்டே தான் இருக்காரு. அதனால, நீங்க நல்லள பிள்ளைகளா இருக்கணும்ன்னு சொன்னாங்க. திரும்பவும் சிஸ்டர் PRAISE THE LORD CHILDREN நு சொல்வாங்க. உடனே மாணவிகளும் THANK U SISTER PRAISE THE LORD ன்னு சொன்னாங்க.

PRAYER முடிஞ்சி கிளாஸ் க்கு போனோம். PRAYER சொல்லிட்டு மீண்டும் PRAISE THE LORD மூன்று முறை சொல்லிட்டு அமர்ந்தோம். ஆசிரியை வந்தவுடன் மீண்டும் GUD MORNING MISS PRAISE THE LORD ன்னு சொன்னோம். உடனே மிஸ் GUD MORNING PRAISE THE LORD ன்னு சொன்னாங்க. மற்ற வகுப்பில் இருந்து எதாவது கேட்பதற்காக மாணவி யாரேனும் வந்தால் வகுப்பில் நுழைந்தவுடன் ஆசிரியையை பார்த்து GUD MORNING MISS PRAISE THE LORD ன்னு சொல்லி தனது தேவையை கேட்பாங்க. இப்படி ஒவ்வொரு மிஸஸ் வரும் போதும் இதே PRAISE THE LORD கூத்து தான் நடக்கும். படிக்கலனா கூட திட்டமாட்டாங்க போல இருக்கு, ஆனால், இந்த PRAISE THE LORD சொல்லலைனா திட்டுவாங்க போல் இருக்கு.

மதியம் சாப்பாட்டு மணி அடித்தவுடன் பைபிள் ல இருந்து வசனங்கள் சொல்லி மீண்டும் PRAISE THE LORD ன்னு சொல்லிட்டு சாப்பிடனும். சாப்பாடு பெல் முடிந்ததும் திரும்பவும் வகுப்புக்குள் வந்ததும் PRAYER சொல்லிட்டு PRAISE THE LORD சொல்லிட்டு உட்காரனும். சாயங்காலம் கிளம்பும் போதும் இதே PRAYER , PRAISE THE LORD சொல்லிட்டு தான் வீட்டுக்கு வரணும்......... இத்தனையும் ஒரு நாளில் நடந்தது. இது முதல் நாளில் மட்டும் அல்ல, நாள் தோறும் இதே கதை தான் தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது..........


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக