வியாழன், 9 ஆகஸ்ட், 2012

"மூன்று பாரதியார்கள்

எங்களுக்கு நேற்று காலாண்டு தேர்வு முடிந்தது. எங்கள் தமிழ் தேர்வு அன்று நடந்த ஒரு நிகழ்வை பதிவு செய்கிறேன். தமிழ் தேர்வு அன்று தேர்வு எழுதிவிட்டு வந்தோம். பின்னர் நானும் எனது தோழிகளும் வகுப்பறைக்கு வந்து நாம எழுதியது சரியா தவறா என்று நோட்ஸ் எடுத்து திருப்பி திருப்பி பார்த்துகிட்டு இருந்தோம். அப்போ சில பேர் ஹைய்யா நான் எழுதியது சரி என்றும் மற்றும் சில பேர் ஐயோ நான் இது தப்பு பண்ணிட்டேன்டி அப்படினும் பீல் பண்ணி சொல்லிட்டு இருந்தாங்க.

இந்து ப்ரியா ன்னு ஒரு பொண்ணும், கோகிலான்னு ஒரு பொண்ணும் எத்தனை ரைட் எத்தன தப்புன்னு சொல்லிட்டு இருந்தாங்க. அப்போ கோகிலான்னு சொன்னேனே அந்த பொண்ணு என்கிட்ட பாரதியார் குறிப்பு வரைக என்று கேள்வி தாளில் வந்து இருந்ததே அதுக்கு நோட்ஸ்ல இருந்த சுப்பிரமணிய பாரதியார் குறிப்பு வரைக அதுதானே எழுதணும் ன்னு கேட்டா... ஆமாம்டி அது தான் எழுதணும் ன்னு நானும் சொன்னேன்.

அப்போ இந்து ப்ரியாக்கு தோணுச்சு பாருங்க ஒரு சந்தேகம் என்கிட்ட ஏண்டி சுப்பிரமணிய பாரதியாரும், வெறும் பாரதியாரும் ஒண்ணானு கேட்டா....?? எனக்கு இந்த கேள்வியை கேட்டு அவ நிலைய நினச்சி மனசுக்குள்ள சிரிச்சேன்.. அப்புறம் நான் வேணுன்னே சொன்னேன், இல்லடி பாரதியாரும், சுப்பிரமணிய பாரதியாரும் பக்கத்து பக்கத்து வீட்டுல இருந்தவங்கன்னு சொன்னேன். அதுக்கு அவள், அதானே பார்த்தேன் எப்படியோடி நல்லவேள நான் அந்த கேள்வியை எழுதல கோகிலாக்கு ஐந்து மார்க்கு போச்சுப்போ ன்னு சொன்னாள். நீயும் அந்த பாரதியார் கேள்விக்கு நோட்ஸ்ல இருந்த சுப்பிரமணிய பாரதியார் பதிலையா எழுதிவெச்ச ன்னு கேட்டா. நானும் சோகமா முகத்தை வெச்சிகிட்டு ஆமாம்டி நானும் தெரியாம அத தான் எழுதிவெச்சிட்டேன் ன்னு சொன்னேன்.

அதுக்கு அவள், ஏண்டி question ன ரெண்டு மூணு தடவ திருப்பி படிக்கமாட்டீங்களா ன்னு எங்கள திட்டினா. அப்புற அவ கேட்டா எக்ஸாம் ஹால் க்கு நாம போகும் போது +2 அக்காங்க மகாக்கவி சுப்பிரமணிய பாரதியார் எட்டயபுரத்துல பிறந்தாங்கன்னு படிச்சிட்டு இருந்தாங்களே அவர் யாருடி ன்னு என்கிட்ட கேட்டா... நான் சொன்னேன் அய்யய்யோ இவர பத்தி சொல்றதுக்கு மறந்துட்டேண்டி.. சீக்கிரம் சொல்லுடி சாப்பிட போகணும் ன்னு அவசரபட்டாள் இந்து ப்ரியா. இம் சரி அப்படின்னு நான் கதை உட ஆரம்பிச்சேன்.....

பாரதியார், சுப்பிரமணிய பாரதியார், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எல்லோருமே சின்ன வயசுல இருந்து பக்கத்துக்கு பக்கத்து வீட்டுல இருந்தவங்க.. ஒண்ணா விளையாடுவாங்க ன்னு சொன்னேன். அப்படியாடி ன்னு ஆச்சரியமா கேட்டா. ஆமாம்டி ன்னு சொன்னேன்.

அப்புறம் ஏன் பாரதியார் பற்றி மட்டும் குறிப்பு வரைக ன்னு கேட்குறாங்க... சுப்பிரமணிய பாரதியும், மகாகவி சுப்பிரமணிய பாரதியும் பாவம் தானே.... அவங்க குறிப்பு ஏன் தரவே மாட்டிக்குறாங்க ன்னு கேட்டா.... அதுக்கு நான் சொன்னேன், இல்லடி பாரதியாருக்கு மட்டும் தான் நல்லா கவிதை எழுத தெரியும். மீதி ரெண்டு பேரும் சுமாராதான் எழுதுவாங்க ன்னு சொன்னேன். அப்போ மத்த ரெண்டு பேரோட கவிதைகள் இருக்கா.... ?/ ன்னு கேட்டா... இருக்குடி ன்னு சொன்னேன். உங்க வீட்டுல இருக்கா ன்னு கேட்டா, இருக்கே ன்னு சொன்னேன்.

மூணு பேரோடு கவிதைகளுமே உங்க வீட்டுல இருக்கான்னு ஆச்சரியத்தோடு கேட்டா.. ஆமாம்டி ன்னு சொன்னேன். அவங்க ரெண்டு போரோட கவிதை புத்தகத்தையும் எடுத்துட்டு வாடி ன்னு சொன்னா. கொடுத்தா நீ படிப்பியான்னு கேட்டேன். இம் அவங்க குறிப்பையும், கவிதையையும் பார்க்கலாமே ன்னு தான் கேட்டேன். ன்னு சொன்னா. சரி நான் நாளைக்கு கொண்டுட்டு வரேன் சாயங்காலம் ஞாபகபடுதுன்னு சொன்னேன்...

அப்புறம் சாப்பிட உட்கார்ந்தோம். தமிழ் செகண்ட் பேப்பர்க்கு படிச்சிட்டு இருந்தோம். சாயங்காலம் வீட்டு பெல் அடிச்சாங்க. அப்போ ப்ரியா மறந்துடாதடி மூணு பாரதியார் புத்தகத்தையும் எடுத்துட்டு வான்னு சொன்னா.. அப்போ நான் அவகிட்ட மூன்று பாரதியாரெல்லாம் இல்லடி .. பாரதியார், சுப்பிரமணிய பாரதியார், மாககவி சுப்பிரமணிய பாரதியார் எல்லோரும் ஒருதங்கதான் ன்னு சொன்னேன்.

அதுக்கு அவள், ஏய்...... போய் சொல்லாதடி நாளைக்கு உன்னால அவங்க மூணு பேரோட புத்தகத்தை எடுத்துட்டு வர முடியாதுன்னா முடியாதுன்னு சொளிடி, அதுக்காக இப்படி அவங்க மூணு பேரும் ஒருத்தங்கதான் ன்னு சொல்லாத எனக்கு கெட்ட கோவம் வந்துடும் ன்னு மிரட்டினா......

நான் அவளிடம் உண்மையாக ஒருத்தர் தான். அவர் இயற்பெயர் சுப்பிரமணியம். அவர் சின்ன வயசுலேயே கவிதை எழுதினதால பாரதின்னு பட்டம் கொடுத்தாங்க. அவர் சூப்பரா எழுதியதால மகாகவி ன்னு பட்டம் கொடுத்தாங்க என்று சொன்னேன்.

"கற்றது தமிழ்" அஞ்சலி மாதிரி ... " நிஜமாதான் சொல்றியா.." ன்னு கேட்டா.. நானும் ஜீவா மாதிரி இம்ம்ம்ம்ம்ம்ம்ம் ... ன்னு தலை ஆட்டினேன். உடனேஅவ நான் எதுக்கு கேக்குறேனா , மதியம் சொன்னத இப்போ பொய் ன்னு சொன்ன மாதிரி, இப்போ சொன்னத நாளைக்கு பொய்ன்னு சொல்லகூடாதுபாரு அதுக்கு தான்... இதுல என்ன பொய் சொல்றதுக்கு இருக்கு. காலைல நான் சொன்னது தான் பொய் இப்போ சொன்னது தான் நிஜம் னு சொன்னேன்.

சரி, இனி எந்த பாரதியார் குறிப்பு குறிப்பு வரைக ன்னு கேட்டாலும் இவரையே தான் எழுதணுமா ன்னு கேட்டா. ஆமாம் டி ன்னு சொல்லிட்டு நகர்ந்தேன்.

உடனே.... அப்போ பாரதியாரும், பாரதிராஜாவும் ..............ன்னு இழுத்தா.. உடனே நான் சிரிச்சிக்கிட்ட நாளைக்கு சொல்றேண்டின்னு ஓடி வந்துட்டேன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக