ஞாயிறு, 28 நவம்பர், 2010

வெட்டியாக கழித்த நாட்கள்


3.11.2010 அன்று காலையில் இருந்து மிகவும் சந்தோஷம். ஏனென்றால், அன்று மாலை வீட்டிற்கு அனுப்புகிறார்கள் . தீபாவளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை. அன்னைக்கு காலையிலேயே எல்லாம் எடுத்து வைக்கலாம்ன்னு நினச்சேன். சரி நாம ஆறு மணிக்கு தான போவோம் என்று விட்டுவிட்டேன். அப்புறம் காலைல சாப்பிட்டு விட்டு கிளாஸ் க்கு சென்றால் முதல் பாட வேளை அறிவியல். டெஸ்ட் வேற சொல்லி இருந்தாங்க. என்ன பண்றதுன்னு தெரியல. 2.4.2010 அன்னைக்கு சாயங்காலம் படிக்கல. வீட்டுக்கு போற குஷி தான். அப்புறம் முதல் period மிஸ் வந்தாங்க. நாம செத்துட்டோம் ன்னு நினச்சேன். இத்தனைக்கும் 1 பாடம் தான் டெஸ்ட். திடீர்ன்னு மிஸ் இப்போ படிங்க. last period டெஸ்ட் எழுதுங்கன்னு சொன்னாங்க. அந்த பாடம் படிச்சதுதான் ஆனாலும் test ன்னு சொன்னதால பயம் வந்துடுச்சு. எப்படியோ அந்த 1st period படிச்சிக்கிட்டே ஓடிடுச்சி. எப்படியோ அடுத்த period ல கணக்கு சார் sum தான் நடத்துவார் என்ற தைரியத்துல ஜாலியா இருந்தேன். நினச்ச மாதிரியே சார் sum தான் நடத்தினாரு. அந்த period எப்படியோ போச்சு.

அப்புறம் break எல்லார்க்கிட்டையும் சிரிச்சி பேசி அதுவும் முடிந்துவிட்டது. மூன்றாவது period ஆரம்பித்தது. test எழுதணும் ஏற்கனவே படித்தது தான் அதனால எப்படியோ எழுதிட்டேன். நாலாவது period english படிக்க சொன்னாங்க. அப்பாடான்னு பெருமூச்சு விட்டேன்.

அப்புறம் அதான் நம்ம period வந்தது. அதான் சாப்பாடு period. சாப்பாடு உள்ள இறங்கவே இல்ல. இருந்தாலும் சாப்பாட்டுக்கு நாம தானே காசு கட்டுறோம் ன்னு நினச்சி கொஞ்சம் சாப்பிட்டேன்.

அப்புறம் தமிழ் பாடவேளை வந்தது. தமிழ் தானே எல்லாம் படிச்சாச்சு. எது கொடுத்தாலும் எழுதலாம் ன்னு விட்டுட்டேன். test எழுதியும் விட்டுட்டேன். ஆறாவது period english படிச்சோம். அப்புறம் ஒரு பாடம் full test சொன்ன science period வந்தது. முகத்துல இருந்த சந்தோஷம் எல்லாமே போச்சு. ஒரு periodனாலே மயக்கம் வரும் ஏழு, எட்டு தொடர்ந்து 2 period தாங்கமுடியுமா ன்னு நினச்சேன். மிஸ் வந்தாங்க. கிளாஸ் அமைதியா இருந்தது. வந்த உடனே நோட் எடுங்க question சொல்றேன் எல்லோரும் புக்க பைல போடுங்க ன்னு சொன்னாங்க. அப்புறம் நோட் எடுத்தோம். மிஸ் question சொன்னாங்க. நான் எல்லாமே படிச்சிட்டு தான் போனேன். ஆனா எல்லாமே மறந்து போன மாதிரி இருந்தது. சரி நாம பார்க்காத testடான்னு நான் பாட்டுக்கு எல்லாமே தெரிஞ்சவ மாதிரி எழுதிட்டு இருந்தேன். மிஸ் வேற என்னையே பார்த்துட்டு இருந்தாங்க. சரி ன்னு விட்டுட்டேன். அப்புறம் நாலு மணி ஆச்சு விடுதி மாணவர்கள் கிளம்பலாம் ன்னு சொன்னாங்க. எங்க மிஸ் தான் ரொம்ப நல்லவங்களாச்சே நீங்க மட்டும் ஒரு கேள்வி எழுதி காட்டிட்டு போலாம் ன்னு சொன்னாங்க.

மொத்தமா ஐந்து மதிப்பெண் வினாக்கள் நான்கு கொடுத்து இருந்தாங்க. அந்த நாலுமே எனக்கு தெரியும். எல்லாத்துலயும் பாதி பாதி எழுதி வெச்சிட்டு இருந்தேன். மிஸ், கொண்டு வாங்க ரெண்டு period டா ஒண்ணுமே எழுதலையான்னு கேட்டாங்க எங்க கிளாஸ் ல மூன்று பேர் ஹாஸ்டல். மூன்று பேருமே கொண்டு போனோம். அதுல ரெண்டு பேர் நோட்டும் திருத்திட்டாங்க. லாஸ்ட் நோட் என்னுடையது. எனக்கு இந்த ஒரு நாள் வராதா வராதா ன்னு நினைச்சது ரொம்ப தப்பா போச்சே இப்படி வந்து மாட்டிக்கிட்டமே ன்னு நினச்சேன். மிஸ் திருத்திட்டாங்க. நாலு கேள்வியும் மூன்று பெரும் home test எழுதிட்டு வாங்கன்னு சொன்னாங்க. அப்பாடா ன்னு சந்தோசப்பட்டேன்.
அப்புறம் பிரண்ட்ஸ் கூட வீட்டுக்கு வந்தேன். வந்த உடனே பை ஒரு பக்கம், செருப்பு ஒரு பக்கம் போட்டுட்டு உள்ள வந்தேன். வீட்டுக்கு வந்துட்டோம் ன்னு சந்தோசமா இருந்தது. அம்மா எப்படி இருக்க? ஏன் இளச்சிட்ட ன்னு கேட்டாங்க. அப்புறம் சிக்கன் எடுத்துட்டு வந்தாங்க. அக்கா எனக்கு சமைத்துக் கொடுத்தா.அன்னைக்கு இரவு வீட்டு சாப்பாடு சாப்பிட்டேன். அப்புறம் என்ன டிவி தான், சிஸ்டம் தான். ஸ்கூலா இருந்தா ஒவ்வொரு period ம் ஒரு வருஷம் மாதிரி போகும். ஆனா வீட்டுக்கு வந்துட்டா இப்ப தான் வந்த மாதிரி இருக்கும் அதுக்குள்ளே விடிஞ்சிடும். அம்மா ஏதாவது கட்டுரை எழுது எழுது ன்னு சொல்வாங்க. நிறைய புத்தகங்கள் எனக்காக வாங்க வெச்சி இருந்தாங்க நான் படிப்பேன் ன்னு. ஆனா நான் படிக்கல டிவி தான் கதி ன்னு இருந்துட்டேன்.

4.11.2010 காலை எட்டு மன்னிக்கு எழுந்தேன். எழுந்ததும் டிவி போட்டேன். பட்டு மணி இருக்கும் என் firend கவிதா போன் பண்ணி பேசினா. அவ கிட்ட பேசிட்டு கம்ப்யூட்டர்ல கேம் விளையாடினேன். அன்னைக்கும் சிக்கன் தான் எடுத்தாங்க. என்கூட ஒன்பதாவது படிச்ச சௌந்தர்யா போன் பண்ணி பேசினா. நாங்க ரெண்டு பெரும் ரொம்ப நெருக்கம். எனா அவ என் சைஸ்ல இருப்பா. அவ கிட்ட பேசினது சந்தோசமா இருந்தது.

5.11.2010 தீவாவளி - அன்னைக்கு காலைல எட்டு மணிக்கு எழுந்தேன். அன்னைக்கு சிக்கன் பிரியாணி. நான் உருப்படியா ஒன்றுமே பண்ணல. வீட்டுல படிக்கலாம் ன்னு பாட புத்தகம் எடுத்துட்டு வந்தேன். ஆனா இந்த டிவி, கம்ப்யூட்டர் என்ன கெடுத்துடுச்சி. அன்னைக்கு மாலை மைனா படத்துக்கு போனோம்.

அடுத்த நாள் (6.11.2010) விடிந்தது அன்னைல இருந்து எனக்கு பயம் வர ஆரம்பிச்சது. ஐயோ இன்னும் ஸ்கூல் க்கு போக ஒரு நாள் தான் தானே இருக்கு ன்னு பயம் வர ஆரம்பிச்சது. இதுல இன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா நான் ஸ்கூல் க்கு போற அன்னைக்கு (8.11.2010) இரண்டாம் இடைத் தேர்வு. நான் இங்க படிக்கலாம் ன்னு நினைப்பேன் இன்னும் மூன்று நாள் இருக்கு ரெண்டு நாள் இருக்கு, இன்னும் ஒரு நாள் இருக்கு ன்னு ஓட்டி ஓட்டி கடைசியா ஏழாம் தேதியும் வந்தது. நாளைக்கு ஸ்கூல் அதுவும் தேர்வு வேற இருக்கு. அன்னைக்கு எங்க வீட்டுல சிக்கன் இல்ல , கீரை தான். சாப்பாடே இறங்கல. கஷ்டமா இருந்தது. எங்க ஹாஸ்டல் கண்ணு முன்னாடி வந்து வந்து போய்க்கிட்டே இருந்தது. கொஞ்ச கொஞ்சமா மகிழ்ச்சி போய் துன்பம் என்ன நெருங்கிக்கிட்டே இருந்தது. அன்று மாலை மழை காரணமாக சில மாவட்டங்களுக்கு லீவ் என்று நியூஸ் ஓடிட்டு இருந்தது. நம்ம ஊர் பேர் வராதான்னு டிவியையே ஏக்கமா பார்த்துட்டே இருந்தேன். அம்மாவையும் அக்காவையும் நம்ம ஊர்ல லீவ் விடமாட்டான்களா ன்னு கேட்டுக்கிட்டே இருந்தேன். எனக்கு துக்கம் தொண்டைய அடிச்சது. என்னால ஒண்ணுமே செய்ய முடியல.

நாளைக்கு ஸ்கூல் க்கு போறோம் ன்னு தெரிஞ்சும் நான் கம்ப்யூட்டர்ல கேம் தான் விளையாடிட்டு இருந்தேன். நான் ரொம்ப நொந்து போய்டேன். கீழ் வீட்டில் இருக்கும் தாத்தாவை பார்க்க சென்ற அக்கா கத்திக் கிட்டே மேல வந்தா என்னன்னு கேட்டதுக்கு மழை காரணமா நாளைக்கு சேலத்துல இருக்குற எல்லா ஸ்கூல் க்கும் லீவ் ன்னு சொன்னா. நான் மற்ற friends க்கு போன் பண்ணி தகவல் சொன்னேன். முக்கியமான விஷயம் நாலாந்தேதி, ஐந்தாம்தேதி, ஆறாம்தேதி படிக்காத நான் ஏழாம் தேதி படிச்சேன். அது ஒன்னு தான் கவலையா இருந்தது. ஏனா நான் படிச்சேன் ஆனா எட்டாம் தேதி லீவ் விட்டுட்டாங்க. எட்டாம் தேதி லீவ் ன்னு சொல்லி இருந்தா அன்னைக்கே படிச்சி இருக்கலாம். அப்புறம் நான் என் மனச தேத்திக்கிட்டேன் தமிழ் தான படிச்சோம் ன்னு.

அடுத்த நாள் எத்தாம் தேதி அம்மா வெண்டைக்காய் குழம்பு வெச்சாங்க. அப்புறம் மத்தியானம் கொஞ்சம் படிச்சேன். ஏனா அன்னைக்கு அக்கா வீட்டுல இல்ல. அவளுக்கு அன்று காலேஜ் இருந்தது. அப்புறம் அன்று இரவு அம்மா எனக்கு பரோட்டா பிடிக்கும் ன்னு வாங்கிட்டு வந்தாங்க. ஆனா அன்னைக்கு எனக்கு பரோட்டா பிடிக்கல (ஏனா அடுத்த நாள் ஸ்கூல்) பரோட்டா சாப்பிட்டு இருக்கும் போது கண்ணுல கண்ணுதண்ணி நின்னுச்சி. அம்மா மனசு கஷ்டப்படக்கூடாது ன்னு நான் அழல. அம்மா கிட்ட கேட்டுக் கிட்டே இருந்தேன் நாளைக்கு ஸ்கூலா ஸ்கூலான்னு அக்காகிட்டையும் கேட்டேன் ஆமாடின்னு சொன்னா. அன்று இரவு அம்மாகூடையே படுத்துக்கிட்டேன். இரவு முழுக்க அழுகை வந்துகிட்டே இருந்தது. அப்புறம் அடுத்த நாள் காலைல ஐந்துஅரை மணிக்கு எழுந்தேன் விடிஞ்சிடுச்சி வெளில போய் பார்த்தேன். மழை வராதா?, லீவ் விட மாட்டாங்களான்னு. இன்னைக்கும் அந்த ஜல் புயல் வந்தா நல்ல இருக்குமே ன்னு நினச்சேன். இல்லனா எல்லா ஸ்கூலையும் இடிச்சா நல்லா இருக்கும் நினச்சேன். நானே ஸ்கூல இடிச்சிடலாம்ன்னு கூட ஆசைப்பட்டேன். ஊர்ல இருக்குற அக்கா போன் பண்ணி பேசினாங்க. எனக்கு அழுகையே வந்துடுச்சி. அழுதேன் அழுதேன் அழுது தீர்த்தேன். அப்புறம் ஸ்கூல் க்கு போக ரெடி ஆனேன். அக்கா நேற்று அம்மா வாங்கி வந்த பரோட்டாவ கொத்து பரோட்டாவா முட்டைஎல்லாம் போட்டு செய்துக் கொடுத்தா. என்னால சாப்பிட முடியல. மறுபடியும் எப்ப வீட்டுக்கு வருவேன் ன்னு அம்மாகிட்ட கேட்டேன். அரையாண்டு விடுமுறை டிசம்பர் கடைசி வாரம் விடுவாங்க ன்னு சொன்னாங்க. என்ன என்னாலேயே அடக்க முடியல. மனசே இல்லாம கிளம்பினேன். என் மாமா தான் என்ன பஸ் எற்றிவிட்டார். நான் மீண்டும் இந்த மாதிரி நான்கு நாட்கள் விடுமுறை வருமான்னு ஏங்கிக் கொண்டே பஸ் ஏறினேன். பஸ் எடுத்தாங்க. பஸ் போக போக நாம இந்த ஐந்து நாள் லீவ்ல என்ன உருப்படியா பண்ணினோம் ன்னு நினைச்சிட்டே போனேன். காட்சி வலைதளத்தில் சில கதைகள் படித்தேன். வேற ஒண்ணுமே உருப்படியா பண்ணல. பஸ் ஸ்கூல நெருங்கிக் கிட்டே இருந்தது. என் மனம் பதறிக் கொண்டே இருந்தது.

நான் என்னைக்குமே வீட்டுல இருந்து வரும் போது கவலையா வந்தது இல்ல. சரி இன்னும் ரெண்டு வருஷம் தான். அதுக்கப்புறம் அம்மாகூட தான இருப்போம் ன்னு நினைச்சிக்கிட்டேன். திரும்பவும் இந்த பஸ்ல எப்போ சேலம் வருவோம் ன்னு நினைக்கும் போது விசில் அடித்தது. பஸ்ஸை விட்டு பிரியாமல் பிரிந்து பள்ளியில் உள்ள விடுதிக்கு சென்றேன் அரையாண்டு விடுமுறை எப்போ வருமென்று....


3 கருத்துகள்:

  1. வணக்கம் சொர்ணா பிள்ளைகள் எல்லொருக்கும் பள்ளின்னா கசக்குது என்ன செய்ய.
    வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுக.
    என் வலைப்பூ பார்க்க
    http://rathinapughazhendi.blogspot.com
    http://mankavuchi.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. நல்லா எழுதியிருக்கீங்க தங்கை. வாழ்த்துக்கள். :)

    பதிலளிநீக்கு
  3. அருமை அருமை அப்டியே இயல்பு மாறாமல் எழுதி இருக்கீங்க.முன்னேற்பாடுகளும்,திட்டமிடுதலும் எல்லா வேலையையும் சுலபமாக்கும்...இந்த வேலைகளையெல்லாம் உங்க அம்மா உங்களுக்கு கத்துத்தருவாங்க...அப்றம் கொஞ்சம் சமையல் பக்கமும் வாங்க...இந்த காலத்துல எங்க பொண்ணுங்க சமைக்கிறிங்க...ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு