வியாழன், 14 ஜனவரி, 2010

தண்ணீருக்காக நான் தவித்த சோகக்கதை


காக்கா தண்ணீருக்காக அலஞ்ச கதைய நீங்க எல்லாரும் கேட்டு இருப்பிங்க . ஆனால், நான் தண்ணீருக்காக அலஞ்ச கதைய இதுவரை கேட்டு இருக்கமாட்டிங்க . சொல்றேன் ......... கேளுங்க


இது நான் ஐஞ்சாவது படிக்கும் போது நடந்தது ( 3.12.2005 ) . அன்னைக்கு காலைல ஸ்கூல்க்கு கெளம்பிட்டு இருந்தேன். வீட்ல வாட்டர் கேன் தேடி தேடி பார்த்தேன் எங்கயுமே இல்ல. அதனால நான் வசந்தி பாட்டி வீட்ல போய் வாட்டர் கேன் வாங்கிட்டு வந்தேன் . எங்க அக்கா எனக்கு வாட்டர் கேன்ல தண்ணீர் பிடிச்சி தந்தா. என் ஆட்டோ வந்துடுச்சி அவசரத்தில் நான் வாட்டர் கேனை விட்டுட்டு ஆட்டோல ஏறிட்டேன் .

காலைல எல்லா பிள்ளைங்கக்கிட்டையும் தண்ணி கேட்டேன் யாருமே தரல தெரியுமா . அஸ்வினி என்ற பிள்ளை மட்டும் கொஞ்சூண்டு தந்தா . காலைல இன்டர்வெல் பெல் அடிச்சது . அப்பவும் யாரும் எனக்கு தண்ணி தரல எல்லாரும் எனக்கு சாயங்காலம் வரைக்கும் வேண்ணும்னு சொல்லிட்டாங்க . மதியம் ரெண்டு பேர் மட்டும் கொஞ்சம் கொஞ்சம் குடுத்தாங்க அதும் நான் எத்தன முறை கேட்டேன் தெரியுமா? அதுக்கு அப்புறம் தான் குடுத்தாங்க . மதியம் இண்டர்வேள்ளையும் யாரும் தரல .

மதியானத்துல இருந்து சாயங்காலம் வரைக்கும் நான் தண்ணி குடிக்கல . சாயங்காலம் டான்ஸ் கிளாஸ்ல பிரியான்னு ஒரு பிள்ளகிட்ட கொஞ்சூண்டு தண்ணீர் வாங்கினேன் . என்ன போல நீங்களும் வாட்டர் கேனை வீட்ல வெச்சிட்டு போய் கஷ்டப்படாதிங்க பிளஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக