வியாழன், 14 ஜனவரி, 2010

என் அம்மா .....


இது என் அம்மாவை பற்றி நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எழுதியது.

எனக்கு என் அம்மா நான் போகும் டான்ஸ் கிளாஸ் , டியூஷன் ஆகியவற்றிற்கு பணம் கொடுப்பாங்க . சாயங்காலம் நான் வந்ததும் எனக்கு டீ வெச்சி குடுப்பாங்க. நான் வேண்டாம்னு சொன்னால் சரி போ சந்தோசம்னு சொல்லுவாங்க . இப்படிப்பட்ட அம்மாவை நீங்க எங்கயும் பார்க்க முடியாது. தான் மட்டும் சாப்பிட்டால் போதும் என்கிற அம்மாவை எங்கயாவது பார்த்து இருக்கீர்களா ?

இரவில் சாப்பாடு எனக்கு சாப்பாடு போடுவாங்க நான் வேண்டாம் என்றால் சரி போ சந்தோசம்னு சொல்லுவாங்க. காலைல நான் நான் ஸ்கூல்க்கு கிளம்பும்போது சாப்பாடு போடுவாங்க. நான் ஸ்கூல்க்கு ரெடி பண்ணிட்டு சாப்பிட உட்காருவேன் திடிர்னு எனக்கு சாப்பாடு வேண்டாம் டைம் ஆச்சின்னு சொல்லுவேன் . உடனே எப்பவும் போல அம்மா சரி சந்தோசம்ன்னு சொல்லுவாங்க

இதன்மூலம் என் அம்மா உங்கள் அம்மாவாக இருந்தால் அவளை நீங்கள் உங்கள் அம்மா என்று சொல்லுவீர்களா ? இருந்தாலும் இப்படிப்பட்ட அம்மாவை என்னால் மறக்கமுடியாது , அவள் இல்லாமல் என்னால் இருக்கவும் முடியாது .
தினமும் நான் செய்யும் அனைத்து செயல்களும் என் அம்மாவையே நியாபகப்படுத்தும்.


( இது நான் ஐந்தாவது படிக்கும் போது என் அம்மாவைப்பற்றி குறும்புத்தனத்தோடு எழுதியது )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக