வியாழன், 14 ஜனவரி, 2010

ஏங்கம்மா .....


இது நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது எழுதியது.
( 12.2.2006 )

தற்பொழுது ஏங்கம்மா உயிருடன் இல்லை என் பாட்டி மறைவு நாள் 14.11.2006

(இதுகூட நான் குறும்பு தனத்தோடு எழுதியது பாட்டியைப் பற்றி புரியாமல் எழுதியது . நான் எழுதியதை என் பாட்டி ரசித்து படித்து , அனைவரிடமும் காட்டி மகிழ்ந்தார் )
ஏங்கம்மா என்பவர் ஒரு நியாயம் கேட்பவர் . தினாமும் என் வீட்டிற்கு வருவார். நான் இரவு ஆச்சி என்று சொல்லுவேன் . ஏன்னென்றால் அவர் வீட்டிற்கு செல்ல நேரம் ஆகிவிட்டது என்று நியாபகப்படுத்துவதற்காக. ஏன் என்றால் என் பாட்டி யாராவது நியாயம் பேச கூப்பிட்டால் உடனே சென்று விடுவார். அதுமட்டும் அல்லாமல் அவர் எங்களை குறை சொல்லுபவர் . என் வீட்டிற்கு வந்தால் டீ குடிப்பார் . டீ குடித்ததும் டம்ளர் கழுவமாட்டீர்களா என்று எங்களைத் திட்டுவார். என் அம்மாவையும் திட்டுவார் . மங்கை நீ புள்ள வளக்குறது சரி இல்ல . புள்ளைங்க இதுக்கூட செய்ய தெரியலன்னா என்ன புள்ள வளக்குற அப்படின்னு எங்க அம்மாவ திட்டுவாங்க .


தாத்தா தினமும் மார்க்கெட் போய் காய்கறியெல்லாம் வாங்கிட்டு வந்து பாட்டிக்கிட்ட குடுப்பாங்க . தாத்தா டீ போட்டு தருவார், சமைப்பார் . சனி , ஞாயிறு எற்கார்டு செல்வார் கல்லூரியில் பாடம் நடத்த . அந்த இரண்டு நாள் தான் தாத்தாக்கு நிம்மதி ( பாட்டி இறந்த பிறகு தாத்தா செல்வதில்லை )

தாத்தா எங்களைக் கொஞ்சுவார். அவருக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் . ஏங்கம்மாவுக்கு குழந்தைகளை குறை சொல்ல தான் பிடிக்கும் அதுக்கு தான் தேவை இல்லாமல் எங்களைத் திட்டுவார் . எங்க அம்ம்மாவ திட்டினாக்கூட பரவால குழந்தைகளான எங்களைத் திட்டலாமா

ஆனால் இப்பொழுதுதான் எனக்கு தெரிகிறது என் பாட்டி நாங்கள் நல்ல பிள்ளைகளா உருவாகனும்னு தான் எங்கள திட்டி இருக்காங்கன்னு புரியுது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக